இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி காலமானார்

by Editor / 25-01-2024 09:20:58pm
 இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி காலமானார்

இசைஞானி இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பாவதாரணி காலமானதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக அவரை இலங்கைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் திடீரென காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது சுமார் 47. இவரது மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாநாடு அழகி ,தாமிரபரணி ,மனம் விரும்புதே உன்னை, பிரண்ட்ஸ் ,புதிய கீதை ,பிதாமகன் என பல படங்களுக்கு பாடல் பாடியவர்

.பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு குயில் போல பாடுது என்கிற பாடலுக்காக தேசிய விருதை பெற்றவர்

 

Tags : இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி காலமானார்

Share via