அம்மா உணவகங்களில் விதிகளை மீறினால் நடவடிக்கை மேயர் பிரியா

by Staff / 31-01-2024 03:49:06pm
அம்மா உணவகங்களில் விதிகளை மீறினால் நடவடிக்கை மேயர் பிரியா

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் திமுக ஆட்சி மாறிய பின்பும் அந்த திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அம்மா உணவகத்தில் விதி மீறல்கள் நடந்தால், தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா எச்சரித்துள்ளார். மேலும் ஊழியர்களின் ஊதியம் குறைவாக உள்ளது குறித்து விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via