9 மாதங்களுக்கு பின் திரௌபதி அம்மன் கோவில் திறப்பு.

by Editor / 22-03-2024 09:15:19am
9 மாதங்களுக்கு பின் திரௌபதி அம்மன் கோவில் திறப்பு.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் பூட்டப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாதங்களுக்குப்பிறகு கோவில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஒருகால பூஜை நடைபெறும். பொதுமக்கள் கோவிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதே போல் கோவிலை சுத்தம் செய்ய ஒருவரும், பூஜை செய்ய ஒருவரும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பதற்றத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : 9 மாதங்களுக்கு பின் திரௌபதி அம்மன் கோவில் திறப்பு

Share via