விஜயகாந்த் பூர்வீக ஊருக்கு விஜய பிரபாகரன் வருகை

by Staff / 30-03-2024 05:33:13pm
விஜயகாந்த் பூர்வீக ஊருக்கு விஜய பிரபாகரன் வருகை

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் இன்று மார்ச் 30 விஜயகாந்த் பூர்வீக ஊரான ஊரான அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்திற்கு வருகை புரிந்தார். ‌‌ விஜயகாந்தின் பூர்வீக ஊருக்கு வந்த அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு ஊர் மக்கள், தேமுதிக நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். பின்னர அங்குள்ள பிள்ளையார் கோவிலில் தரிசனம் செய்து அங்கிருந்த பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். ‌ கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த பின்னர், ஏராளமான இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் விஜய பிரபாகரன் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் விஜயகாந்த் மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை பார்த்த விஜய பிரபாகரன் கையெடுத்து கும்பிட்டு நெகிழ்ச்சி அடைந்தார். ‌ இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய பிரபாகரன், நான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வேன். இது வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் விஜயகாந்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் 100% மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். இந்த மக்களுக்காக நிச்சயம் என்னுடைய குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என கூறினார்.

 

Tags :

Share via