உடல் நீல நிறமாகி சிறுமி பலி- சோழவரம் குளிர்பான நிறுவனம் மூடப்பட்டது
குளிர்பான நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் அங்கிருந்து குளிர்பானங்களை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் நேற்று முன்தினம் மளிகை கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த சிறுமி தரணி திடீரென உயிரிழந்தார்.
13 வயதான இவர் வீட்டின் அருகில் உள்ள கடையில் உள்ளூர் தயாரிப்பான குளிர்பானத்தை வாங்கிக் குடித்ததும் உடல் நீலநிறமாகி பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி குடித்த குளிர்பானம் பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்தனர்.
அப்போது சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரத்தில் குளிர்பானம் நிறுவனம் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குளிர்பான நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டது. அங்கிருந்தும் குளிர்பானங்களை எடுத்து பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் முடிவுகள் வந்த பிறகே குளிர்பானத்தில் எந்த விதமான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags :