தேர்தல் விதிமீறலில் முதலிடத்தில் உள்ள மாநிலம்

by Staff / 04-04-2024 03:03:36pm
தேர்தல் விதிமீறலில் முதலிடத்தில் உள்ள மாநிலம்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை 'சி-விஜில்' என்ற செல்போன் செயலி மூலம் அளிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், மார்ச் 16 முதல் ஏப்ரல் 3 வரை 1,25,939 புகார்கள் வந்துள்ளன. கேரளாவில் இருந்து அதிகபட்சமாக 71,168 புகார்கள் வந்துள்ளன, உத்தரகாண்ட் (14,684), கர்நாடகா (13,959), ஆந்திரா (7,055), மேற்கு வங்காளம் (3,126), ராஜஸ்தான் (2,575), தமிழ்நாடு (2,168) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மிசோரம், நாகாலாந்து மற்றும் லடாக்கில் ஒரு புகார் கூட பதிவாகவில்லை.

 

Tags :

Share via