சிகரெட் வாங்க பணம் தராத தந்தை அடித்துக் கொலை

by Staff / 05-05-2024 12:42:03pm
சிகரெட் வாங்க பணம் தராத தந்தை அடித்துக் கொலை

புதுக்கோட்டை அன்னவாசலைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் 2 ஆண்டுகளாக சொந்த ஊரில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவர், நேற்று காலை சிகரெட் வாங்க தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த வினோத்குமார் தனது தந்தையை வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோடி கிணற்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்

 

Tags :

Share via