நடைபயிற்சி சென்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் வெட்டி படுகொலை

by Editor / 08-09-2024 08:53:43am
நடைபயிற்சி சென்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் வெட்டி படுகொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெளியப்பன். இவர்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணை சேர்மனாக பதவியில் இருந்து உள்ளார். இந்த நிலையில் வெளியப்பன்    காலையில் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள சாலையில் நடை‌பயிற்சி சென்ற நிலையில் அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடி சென்று உள்ளனர்.

மேலும் இது குறித்து அங்குள்ளவர்கள் பனவடலிசத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்

 

Tags : நடைபயிற்சி சென்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் வெட்டி படுகொலை

Share via