இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர் .என். ரவியை சந்தித்து திமுக அரசின்....
இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர் .என். ரவியை சந்தித்து திமுக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது என தெரிவித்து பட்டியல் ஒன்றை அளித்துள்ளார். அப்பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் 64 ஆயிரம் கோடி என்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 60 ஆயிரம் கோடி என்றும் கனிமவளத் துறையில் 60 ஆயிரம் கோடி எரிசக்தி துறையில், 55,000 கோடி, கலால் வரி 50 ஆயிரம் கோடி, பத்திரப்பதிவுத்துறை 20 ஆயிரம் கோடி ,நெடுஞ்சாலை துறை 20 ஆயிரம் கோடி, நீர் ஆதாரத்துறை 14000 கோடி, சென்னை மாநகராட்சி 10,000 கோடி, தொழில்துறை 8000 கோடி ,பள்ளி கல்வித்துறை 5 ஆயிரம் கோடி, மக்கள் நல்வாழ்வுத்துறை 5000 கோடி, வேளாண்மை துறை 5000 கோடி ,சமூக நலத்துறை 4000 கோடி என ஊழல் நடந்துள்ள துறைகளில் எவ்வளவு கோடி என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















