கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டிய குழியில் விஷவாயு தாக்கி இருவர்  பலி 

by Editor / 21-09-2024 04:41:34pm
கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டிய குழியில் விஷவாயு தாக்கி இருவர்  பலி 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சீத்திரணி ரோட்டில் உள்ள பிஸ்மில்லா நகரில்  சிக்கந்தர் என்பவர் சொந்த வீடு கட்டி வரும் நிலையில் அவரது வீட்டின் அருகில் கடந்த மூன்று நாட்களாக   ராமையா  மற்றும் பாஸ்கரன்  ஆகியோர் மூலம் கடந்த மூன்று நாட்களாக செப்டிக் டேங்க் அமைப்பதற்காக குழி தோண்டி வந்துள்ளனர்

 இந்நிலையில் இன்று   25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்துள்ளனர் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் இருவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிர் இழந்தனர்.இவர்களது உடல் இளையான்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டிய குழியில் விஷவாயு தாக்கி இருவர்  பலி 

Share via