சென்னையை குளிர்வித்து கொட்டி வரும் மழை-மக்கள் மகிழ்ச்சி.  

by Editor / 25-09-2024 11:55:23pm
சென்னையை குளிர்வித்து கொட்டி வரும் மழை-மக்கள் மகிழ்ச்சி.  

சென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. காலை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு 8 மணிக்கு பிறகு லேசாக தூர ஆரம்பித்த மழை தற்பொழுது கனத்த இடியோடு கூடிய மழையாக பெய்து கொண்டிருக்கிறது. இதனால், மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் கோவை தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

 

Tags : சென்னையை குளிர்வித்து கொட்டி வரும் மழை-மக்கள் மகிழ்ச்சி.  

Share via