சந்திரபாபுநாயுடு கடவுளோடு விளையாடுகிறார்-முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா

by Admin / 28-09-2024 01:42:17am
 சந்திரபாபுநாயுடு கடவுளோடு விளையாடுகிறார்-முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா

ஆந்திரா முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார் .அவரிடம் செய்தியாளர்கள், திருப்பதி லட்டு குறித்து கேட்டதற்கு தன் சுயநலத்திற்காக சந்திரபாபுநாயுடு கடவுளோடு விளையாடுகிறார் என்றும் இதுவரைக்கும் அவர் அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு ...சுயநலத்திற்காக.. யாரை வேண்டுமானாலும் பலி கொடுத்து முதலமைச்சராக முயல்வார் என்றும் அவருக்கு பெண் கொடுத்த மாமனாரையும்  பலிஆக்கியதோடு அவரை முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைத்த  புரந்தரேஸ்வாி கணவர் அவரையும் பலி கொடுத்ததோடு ஜூனியர் என்..டிஆர், ஹரி கிருஷ்ணன் என எல்லோரையும் பலி கொடுத்து தான் அவர் முதலமைச்சராக வந்துள்ளார்

.. ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தை இரண்டாக பிரித்தால் தான் முதலமைச்சர் ஆக முடியும் என்று அதை இரண்டாக பிரிப்பதற்கு துணை நின்றார் இவர் .முதலமைச்சர் ஆகி 100 நாட்களில் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. வெள்ளம் வந்திருக்கிறது. மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை .குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியவில்லை. மக்களை திசை திருப்பவே இதுபோன்று அவர் பேசுகிறார்.

இரும்பு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்களை திசை திருப்பவே அவர் கடவுள் மீது பக்தி இருக்கிற மாதிரியாக பேசுகிறார். உண்மையில், கடவுள் மீது அவருக்கு பக்தி இருந்தால், அவரோ.. டிப்டி சி.எம்.ஓ ஒரு என்குயரி அமைத்து அதன் பிறகு உரிய நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாம் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி மார்ச் வரை தான் முதலமைச்சராக இருந்தார்.அதற்குப் பிறகு தேர்தல் வந்தது. ஜூன் மாதத்தில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சரானார்.

இந்த லட்டில் மிருகக் கொழுப்பு என்பதற்கான செய்தி வந்த பொழுது அவர்தான் முதலமைச்சர். ஜூலை 17. .7 24 இல் கண்டெய்னர் லாரியில் மிருக கொழுப்பு இருந்ததாக பிரஸ்மீட் கொடுத்திருந்தார். இதற்கு திருமலை கோவில் இ .எம். 4 லாரிகளில் வனஸ்பதி வந்தது. அதை திருப்பி அனுப்பி விட்டோம். 4 கண்டைனர்களில் வந்ததை கோவிலுக்கு அனுப்பி இருக்கிறோம் என்று சொன்னார். திருப்பதி கோவில் தனிப்பட்ட நிர்வாகத்தின் இயங்குவது.... அந்த கண்டெய்னர் லாரியில் வந்த நெய் காலகட்டத்தில் நீங்கள் தான் சி.எம் ஆக இருந்தீர்கள்.

. ஜகன்மோகன் ரெட்டியை அரசியலில் ஜீரோ ஆக வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். உண்மையில், அவருக்கு கடவுள் பக்தி இல்லை .அவர் எந்த பூஜையில் கலந்து கொண்டாலும் அங்கே காலிலே ஷூ போட்டுக் கொண்டுதான் கலந்து கொள்வார். .திருப்பதி லட்டு மாமிச கொழுப்பு கலந்திருப்பதில் உண்மை கண்டறிவதற்காக தான் நாங்கள் சி.பி.ஐ வழக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்றார்..

 

Tags :

Share via