மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.

by Editor / 28-09-2024 10:10:53pm
மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக இன்று பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் இடி மின்னலோடு கூடிய கனமழை பெய்தது.இதில் இடி தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த கவிதா(44), வசந்தி(46) ஆகியோர் 100 நாள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags : மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.

Share via