லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை

by Admin / 03-10-2024 02:01:36am
லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் இடி மின்னரடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை சூரவளிக்காற்று மழைக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான திருவண்ணாமலை .திருப்பத்தூர். வேலூர் தஞ்சாவூர். புதுக்கோட்டை. ராமநாதபுரம். கோவை .விருதுநகர். சிவகங்கை .மதுரை. தூத்துக்குடி. திருநெல்வேலி. தென்காசி. கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

 

Tags :

Share via