பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது.

by Editor / 08-10-2024 12:22:06am
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது.

 கன்னியாகுமரி மாவட்டம்  மண்டைக்காடு  கருமன் கூடல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் என்பவருடைய வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 2 வருடமாக தலைமறைவாக இருந்த  முக்கிய குற்றவாளிகளான மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆதில் இமான் மற்றும் முகமது நபில் ஆகியோரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட இருவரையும்  போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

Tags : பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது.

Share via