பாம்பன் புதிய பாலத்தை கூடுதல் பொது மேலாளர் ஆய்வு

by Staff / 12-10-2024 03:29:18pm
பாம்பன் புதிய பாலத்தை கூடுதல் பொது மேலாளர் ஆய்வு

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் பழைய பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் அமைக்கும் பணிகள் 2020ல் ரூ.550 கோடியில் தொடங்கியது. நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட செங்குத்து துாக்குப்பாலத்தின் பணிகள் நிறைவு பெற்று சமீபத்தில் சோதனை நடந்தது. இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனையொட்டி பாலப்பணிகளை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் வரும் 14ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளார்.
 

 

Tags :

Share via