வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி

கன்னியாகுமரி விளவங்கோடு குழித்துறை அருகே உள்ள பிலா விளை பகுதியை சேர்ந்தவர் ஜான்சி பாய் (71). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது ஒரே மகன் வெளிநாட்டில் உள்ளார். அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் ஜான்சிபாயை கவனித்து வந்தனர். இவர் வீட்டிற்கு தினமும் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பால் பாக்கெட் போடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பால் பாக்கெட் ஜான்சிபாய் எடுக்கவில்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது.
பால்காரர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது ஜான்சி வீட்டில் தான் உள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக ஜான்சிபாயின் உறவினர் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர் ஜான்சியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் நலக் குறைவு காரணமாக ஜான்சி பாய் இறந்ததாக கூறப்படுகிறது.
Tags :