ஐநா மீது மத்திய வெளியுறவுத்துறை பகிரங்க குற்றச்சாட்டு

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விக் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது, “பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர ஐநா தவறிவிட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக உள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு தவறான தகவல்களை அளித்து திசை திருப்ப பாகிஸ்தான் முயன்றது” என்றனர்.
Tags :