கும்பமேளாவுக்கு சென்று வந்தால் கட்டாய கரோனா பரிசோதனை; 14 நாட்கள் தனிமை: டெல்லி, ஒடிசா அரசு

by Others / 18-04-2021 10:11:16am
கும்பமேளாவுக்கு சென்று வந்தால் கட்டாய கரோனா பரிசோதனை; 14 நாட்கள் தனிமை: டெல்லி, ஒடிசா அரசு

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளா திருவிழாவுக்குச் சென்று வருபவர்களுக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனையும், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலும் கட்டாயம் என்று டெல்லி, ஒடிசா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த உத்தரவை மீறி நடந்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.
பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .
கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென அறிவித்ததது. அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹரித்துவார் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பல சாதுக்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பமேளா திருவிழா கரோனாவைரஸைப் பரப்பும் முக்கிய ஹாட்ஸ்பாட் மையாக இருப்பதால், அங்கு சென்றுவிட்டு வருவோர் அனைவரும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஒடிசா, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளா திருவிழாவுக்குச் சென்று வருபவர்களுக்கு கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனையும், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலும் கட்டாயம் என்று டெல்லி, ஒடிசா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்த உத்தரவை மீறி நடந்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.
பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .
கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென அறிவித்ததது. அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹரித்துவார் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பல சாதுக்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பமேளா திருவிழா கரோனாவைரஸைப் பரப்பும் முக்கிய ஹாட்ஸ்பாட் மையாக இருப்பதால், அங்கு சென்றுவிட்டு வருவோர் அனைவரும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஒடிசா, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளன.

 

Tags :

Share via