கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்.மாயம் ... திருவான்மியூர் கடற்கரையில் தேடும் பணி தீவிரம்...
திருவான்மியூர் கடலில் குளிக்க சென்ற இளைஞர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள நியூ பீச் கடற்கரைக்கு 6 இளைஞர்கள் நேற்று வந்தனர். அவர்கள் அனைவரும் கடலில் குளித்த போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் 2 இளைஞர்கள் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். ஆனால் பென்ஸ்டன் என்ற வாலிபர் போராடி மீண்டும் கரைக்கு வந்தார். ஒருவர் சிக்கிகொண்டார்.
இதனையடுத்து மற்ற மாணவர்கள் திருவான்மியூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அனைவரும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் என்பதும் கடலில் மாயமான இளைஞர் பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மேத்யூ(18) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மீட்பு படையினர் மாயமான மேத்யூவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இதே போல் மெரினா கடற்கரையில் குளிக்க வந்த 3 இளைஞர்கள் மாயமாகி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :