MBBS மருத்துவ மாணவி தற்கொலை

திருவள்ளூரை சேர்ந்த திவ்யா என்ற மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் திவ்யா இன்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாகவே மகள் தற்கொலை செய்து கொண்டதாக திவ்யாவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :