மனைவிகளோடு தொடர்பில்  இருந்தவரிடம் 10இலட்சம் கேட்டு மிரட்டி கொலைசெய்த கணவன்..

by Staff / 21-09-2025 09:27:13pm
மனைவிகளோடு தொடர்பில்  இருந்தவரிடம் 10இலட்சம் கேட்டு மிரட்டி கொலைசெய்த கணவன்..

மயிலாடுதுறை: மேல குத்தவக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் (35) இவர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.இவரது பெரியப்பா மகன் ராஜா இவர் அதிமுக பிரமுகரான உள்ளார்.இவருடன்  லட்சுமணன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமணன் காதலித்து அஞ்சலி என்பவரை திருமணம் செய்து 2குழந்தைகள் உள்ளநிலையில் ராஜாவின் மனைவிகள்,சசிகலா மற்றும் சத்யா ஆகியோர்களுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த ராஜா, லட்சுமணனிடம் தனது மனைவிகளோடு தப்பான உறவில் உள்ளதை வெளியே தெரியாமல் இருக்கணுமுன்னா ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், லட்சுமணன் சென்னையில் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், நேற்று (செப்.20) லட்சுமணை கண்டுபிடித்த ராஜா கூலிப்படையை வைத்து வெட்டி கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு  ராஜா அவரது தந்தை   உள்ளிட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

 

Tags : மனைவிகளோடு தொடர்பில்  இருந்தவரிடம் 10இலட்சம் கேட்டு மிரட்டி கொலைசெய்த கணவன்..

Share via