குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் - 3-வது நாளாக குளிக்க தடைவிதிப்பு.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மதியம் நேரம் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது.
குறிப்பாக, கடந்த 2 தினங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமும் காட்டாற்று வெள்ளமானது சற்றும் குறையாமல் ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், 3-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் - 3-வது நாளாக குளிக்க தடைவிதிப்பு.



















