ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர்- 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

by Admin / 23-03-2026 07:28:44am
 ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர்- 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர்- 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலை எட்டி உள்ளதாக தகவல். படம் உலக அளவில் 240 கோடியை முதல் நாளிலே வசூலித்து சாதனையை பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டும் மூன்று நாட்களில் சுமார் 339 கோடியை பெற்றுள்ளது. இந்தப் படம் பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க வசூலின் காரணமாக புஷ்பா 2 ,ஜவான் போன்ற படங்களின் சாதனையை இது முறியடித்து உள்ளது. ஸ்பை திரில்லர் படமான இதில் ரன்வீர் சிங் ஹம்சா அலி மசாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு இவருடன் இணைந்து சஞ்சய் தத் ஆர். மாதவன் அர்ச்சில் ராம் பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் .

 

Tags :

Share via