மதுபானம் விற்பனை செய்த 12 பேர் கைது - 75 மதுபாட்டில்கள் பறிமுதல்.

by Editor / 04-12-2021 07:17:59pm
மதுபானம் விற்பனை செய்த 12 பேர் கைது - 75 மதுபாட்டில்கள்  பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் தூத்துக்குடி தென்பாகம், செய்துங்கநல்லூர், ஏரல், சாயர்புரம், கயத்தார், விளாத்திகுளம், குளத்தூர், எட்டையாபுரம்,  தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி  மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 10 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 75 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via