1 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது.

by Staff / 15-12-2022 12:31:43pm
 1 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது.

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்களில் , 3 பேரை மடக்கி பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்ட நபர்களிடம் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 3 பேரிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வடசேரி. போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வடசேரி டிஸ்லரி ரோட்டை சேர்ந்த அய்யப்பன் ( வயது 32 ) , வடசேரி மாடன்கோவில் தெருவை சேர்ந்த. மிக்கேல் ராஜ் ( 46 ) , அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்ராஜ் ( 32 ) என்பதும் , வடசேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் வடசேரியை சேர்ந்த சுஜின் ( 29 ) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அய்யப்பன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சுஜினை தேடி வருகிறார்கள். மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via