கோவில்பட்டி - கடம்பூர் புதிய இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

by Staff / 11-01-2023 01:19:07pm
கோவில்பட்டி - கடம்பூர் புதிய இரட்டை ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கோவில்பட்டி - கடம்பூர் ரயில் பாதை பிரிவில் புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனுடைய இணைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய இரட்டை ரயில் பாதையை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு செய்கிறார்.கோவில்பட்டியில் இருந்து  மோட்டார் டிராலி மூலம் ஆய்வு துவங்கியது.இந்த ஆய்வு கடம்பூரில் மதியம் 01.30 மணிக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் வரை இந்த புதிய இரட்டை பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via