சந்தன மரம் திருட்டு
கோவை மாவட்டம் சுண்ட பாளையம் அடுத்த ரங்கசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதான செந்தில்குமார் இவர் தனியார் மில் ஒன்றில் எழுத்தராக பணிபுரிகிறார், இவரது மில், உரிமையாளர் ஸ்கந்தா என்பவர், சுண்டபாளையம் அடுத்த பூசாரி பாளையம், ரங்கசாமி நகர் பகுதியில், பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார், அந்த பண்ணையில், துரை என்பவரும், அவரது மனைவியும் தங்கி இருந்து கடந்த 3 ஆண்டுகளாக பண்ணையை பராமரிப்பு செய்து வருகின்றனர், பண்ணையில் மூன்று 3 நாட்டு நாய்களும் வளர்க்கப்பட்டு வருகினற்து, இந்த நிலையில், நேற்று முன்தினம், காலை 8, 15 மணியளவில், செந்தில் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட துரை, 3 நாய்களில் 2 நாய்கள், இறந்து கிடப்பதாகத் தெரிவித்தார், இதனை தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற செந்தில் குமார், துரையிடம் விசாரித்தபோது அந்த 2 நாய்களும் புதைக்கப்பட்டதாக தெரிவித்தார், அதன்பிறகு செந்தில் குமார், பண்ணையை சுற்றித் பார்த்தபொழுது, பண்ணையில் இருந்த சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதுகுறித்து செந்தில் குமார் நேற்று செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :