விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் மீது4 பிரிவுகளின் கீழ் வழக்கு.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் மீது நான்கு பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags : விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் மீது4 பிரிவுகளின் கீழ் வழக்கு.