செல்லூர் ராஜு மீதான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரையும், அரசையும் அவதூறாக பேசியதாக செல்லுார் ராஜு மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், செல்லூர் ராஜு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags :