பேரன் இறந்த செய்தி கேட்டு சோகத்தில் பாட்டியும் மரணம்
குஜராத் மாநிலம் நவ்சாரியில் தனது 42 வயது பேரன் இறந்த செய்தியைக் கேட்ட 90 வயது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். லட்சுமிபென் கசுந்திரா என்ற பெண் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரின் பேரன் அஸ்வின் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். பேரன் இறந்த செய்தியை கேட்டு மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். பேரன், பாட்டி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :