லாட்ஜில் இளைஞர் தற்கொலை - போலீசார் விசாரணை

by Staff / 26-02-2024 12:16:57pm
லாட்ஜில் இளைஞர் தற்கொலை - போலீசார் விசாரணை

விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள லாட்ஜில் இளைஞர் துாக்குப்போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மகன் மதன்குமார் (35). ருமணம் ஆகாதவர். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன் திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று பிற்பகல் நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் பணியாளர்கள் சென்று பார்த்த போது, அறையின் உள்ளே மதன்குமார் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via