சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்அனுமதி. 

by Editor / 20-05-2024 06:47:01pm
சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்அனுமதி. 

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் யு டியூப்பர் சவுக்கு சங்கரை 7 காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட பழனி செட்டியபட்டி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி செங்கமலச்செல்வன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது சவுக்கு சங்கருக்குமருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில் மருத்துவபரிசோதனைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமலசெல்வன் உத்தரவு பிறப்பித்தார்.காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து  தேனி பழனி செட்டியபட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக பெண் காவல்துறையினர் பாதுகாப்பாக பெண் காவலர்களால் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

 

Tags : சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்அனுமதி. 

Share via