தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணத்தின் போது திருடிய 6 நபர்கள் கைது.

by Editor / 22-07-2024 11:47:23pm
தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணத்தின் போது திருடிய 6 நபர்கள் கைது.

அதிமுக ஒருங்கிணைப்பு பயணத்தை கடந்த 17 18 19 20 ஆகிய தேதிகளில் அதிமுகவினுடைய முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா மேற்கொண்டார். தனது முதல் நாள் பயணத்தை 17ஆம் தேதி மாலை குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர் புரத்தில் துவக்கினார் அப்போது அங்கு குவிந்த கூட்டத்தை பயன்படுத்தி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது அதில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பணம், பர்ஸ்,செல்போன்,உள்ளிட்ட ஆவணங்கள் திருடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சசிகலா கூட்டத்தின் போதும் பல நபர்களின் பணம் திருடு போனது. இந்த நிகழ்ச்சிகளில் வீடியோ பதிவுகளை வைத்து தென்காசி காவல்துறையினர் திருடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது கூட்டத்தை பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சோமசுந்தரம், திருச்சி முசிறி அண்ணாதுரை சிவகாசி ராமகிருஷ்ணன் பரமக்குடி செல்வகுமார் பழனி முனீஸ்வரன் மம்சாபுரம் குத்தாலிங்கம் ஆகியோர் கூட்டத்தில் புகுந்து திருடியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து இன்று கைது செய்து  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணத்தின் போது திருடிய 6 நபர்கள் கைது.

Share via