. கடன் தொல்லை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 02-09-2024 12:41:30pm
. கடன் தொல்லை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. இவர் கடன் வழங்கும் செயலி மூலம் கடன் வாங்கி உள்ளார். கடன் தொல்லை தாங்காமல் கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் செயலியில் இருந்து அவருக்கு கடனை கட்ட சொல்லி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காத்திருந்த அவரது உறவினர்கள், சதீஷ் இறந்துவிட்டார் என்று கூறியும், அதெல்லாம் தெரியாது கடனை திருப்பி செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via