திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் சீரமைப்பு.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள்,திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன், கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் கன்னியாகுமரி கண்ணாடிப் பாலத்தில் நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் உருவானதைத்தொடர்ந்த்து - புதிய கண்ணாடி அமைக்கும் பணி நிறைவுபெற்றது.
Tags : திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் சீரமைப்பு.