சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவனுக்கும்,உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனை.
திருநெல்வேலி மாவட்டம், தென்னிமலையைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த பாலியல் தொல்லைக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளான கோடீஸ்வரன்மற்றும் சிறுமியின் தாய் மல்காமால் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு,2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்புஅளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 17 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags : சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவனுக்கும்,உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனை.







.jpg)











