நெடுஞ்சாலைத் துறைக்கு டெண்டர் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுவழக்கில் இன்று உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு டெண்டர் கோரிய விவகாரத்தில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதனிடையே இன்று டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
Tags :