சீமானை கைது செய்ய வேண்டும் - நடிகை புகார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார். இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான். அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :