சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு - மு.க.ஸ்டாலின்

by Staff / 24-04-2024 03:42:56pm
சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு - மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நடைபெற்று வரும் சம்ருதா பாரத் அறக்கட்டளை சமாஜிக் நியாயக் சம்மேளனம் மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via