ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி

by Staff / 30-10-2022 12:37:39pm
ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி

டிவிட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ரூ.32.52 லட்சம் கோடிக்கு வாங்கி உள்ளார். இந்நிலையில், டிவிட்டருக்கு போட்டியாக ‘ப்ளுஸ்கை’ என்ற புதிய சமூக வலைதளத்தை உருவாக்க, டிவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான (சிஇஓ) ஜாக் டோர்சி முடிவு செய்துள்ளார். டிவிட்டரை உருவாக்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவர். தற்போது, ‘பீட்டா’ வகையில், இவருடைய ப்ளுஸ்கை வெளியாகி வருகிறது. விரைவில் இதை முழு அளவிலான பயன்பாட்டுக்கு கொண்டு வரப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via