காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் கொலை.. 4 பேர் கைது

by Staff / 04-08-2024 02:10:21pm
காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் கொலை.. 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஜாக்சன் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via